சிறு வயது முதலே கவிதை, நாடகம், இலக்கியம் இதுவே எனது ஆர்வம். கவிப்பேரரசர் கண்ணதாசன் அவர்கள் முன்னால் நான் எழுதிய கவிதையைப் பாராட்டி அவா் வாயாலேயே கவிஞர் என்ற அங்கீகாரம் பெற்றேன். இந்தித் திணிப்பை எதிர்த்துப்போராட கலைஞர் அவர்களால் புதுக்கோட்டை மாவட்டத்தில் முன் அறிவிக்கப்பட்டுச் சிறை சென்ற மொழிப்போராளிகளில் ஒருவன். நான் எழுதிய இந்தித்திணிப்பு எதிர்ப்புக் கவிதை அப்போதைய அரசால் தடைசெய்யப்பட்டு அச்சகம் சீல் வைக்கப்பட்டது.